மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு


கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ராகேஷ் குமார்  20 என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சத்தீஸ்கர்  மாநிலத்தைச் சேர்ந்த நஃபிலாஸ் தண்டி மகன் சுதன் தண்டி  25 என்பவர் மீது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கின் விசாரணை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இவ்வழக்கின் விசாரணை  24.10.2025  முடிவு பெற்று குற்றவாளி  சுதன் தண்டி  25  என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம்  விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற  பெண் தலைமை காவலர் அனந்த செல்வக்கனி  WHC 1792  ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன் பாராட்டினார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்