மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி டாக்டர் இன்ஃபெண்டா டயானா மைக்கேல் அயர்லாந்தில் பேட்டரி ஆராய்ச்சியில் சாதன
மைக்கேல் சகாயராஜ் அவர்களின் மகள் முனைவர்.டயானா ஐரோப்பிய ஆணையத்தால் நிதி அளிக்கப்படும் மிகவும் போட்டித் தன்மை வாய்ந்த ஆராய்ச்சி மானியங்களில் ஒன்றான
மேரி கியூரி ஸ்கொடோவ்ஸ்கா கியூரி ஆக்ஷன்ஸ்
(MSCA) போஸ்ட்டாக் டோரல் பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார்
97.6%இன்று சிறந்த மதிப்பெண்ணுடன் 93.6%கட்டாபைக் கணிசமாகக் கடந்து முனைவர் டயானா மைக்கேல் அடுத்த 30 மாதங்களில் தனது ஆராய்ச்சிக்கு ஆதரவாக 3.3 கோடி நிதியை பெற்றார். மேரி கியூரி பெல்லோஷிப் என்பது உலகளவில் மிகவும் போட்டித் தன்மை வாய்ந்த ஆராய்ச்சி மானியங்களில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் வரையறுக்கப்பட்ட விருதுகளுக்கு போட்டியிடுகின்றனர் இது மதிப்பு மிக்க சாதனையாக அமைகிறது.
முனைவர் டயானா மைக்கேல் அவர்களின் ஆராய்ச்சி அடுத்த தலைமுறை சோடியம் - சல்பர் பேட்டரிகள் வளர்ச்சி கவனம் செலுத்துகிறது. லித்தியம் அடிப்படையிலான ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கு ஒரு வளர்ந்து வரும் மாற்று.
சோடியத்தின் மிகுதி, செலவு, செயல்திறன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றுடன் அவரது ஆராய்ச்சி சுத்தமான ஆற்றல் சேமிப்பின் எதிர்காலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எலக்ட்ரோட் டெவலப்ரியண்ட், பைசெல் ஃபேப்ரிகேஷன், டிவைஸ் இன்ஜினியரிங் மற்றும் பேட்டரி மேலாண்மை அமைப்பு மேம்படுத்துதல் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்து டெக்ட்ரிக் இயக்கத்தை துரிதப்படுத்துவதற்கான முக்கிய முன்னேற்றங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
பேட்டரி ஆராய்ச்சியில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு நிறுவனங்களான அயர்லாந்தின் லிமெரிக் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 30 மாத திட்டம் மேற்கொள்ளப்படும்.
முனைவர் டயானா மைக்கேல் அவர்களின் அறிவியல் பயணம் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் தொடங்கியது.
அங்கு அவர் என்.ஜி.எம் கல்லூரியில் இயற்பியல் இளங்கலை பட்டம் பெற்றார்.அவர் முதுகலை பட்டம் மற்றும் பி ஹெச் டி கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் கிறிஸ்டோபர் செல்வின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அவரது முனைவர் பட்ட ஆய்வு திட நிலை அயனிகளில் கவனம் செலுத்தியது. குறிப்பாக சோடியம் - அயன் பேட்டரிகளுக்கான கலப்பின பாலிமர் எலக்ட்ரோலைட்டுகளின் வளர்ச்சி, அவரது தற்போதைய ஆராய்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது.
அவர் தற்போது அயர்லாந்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். அங்கு அவர் செயல்முறை பொறியியல் மற்றும் சிப் அளவிலான சாதன மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றவர். நுண் சாதனங்களுக்கான மேம்பட்ட பொருள் படிவத்தில் அவரது நிபுணத்துவம் அடிப்படை ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகளின் சந்திப்பில் அவரை நிலைநிறுத்தியது. இதற்கு முன் முதுகலை ஆராய்ச்சியாளராக முனைவர் டயானா மைக்கேல் தொழில் - கல்வித்துறை ஒத்துழைப்புகளில் ஈடுபட்டார் அவர் லிமெரிக் பல்கலைக்கழகத்தில் நிதியுதவி திட்டமான கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர் டயானா மைக்கேலுக்கு பொள்ளாச்சி மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Comments
Post a Comment