மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி அருகே சுற்றுலா பயணிகள் வாகனம் விபத்து குழந்தைகள் உட்பட நான்கு பேர் படுகாயம்
பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி தனியார் கல்லூரி அருகே சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் விபத்து
குழந்தைகள் உட்பட நால்வர் படுகாயம்
தமிழகத்தில் தற்போது தொடர் விடுமுறை என்பதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கும் சென்ற வருகின்றனர்.இந்நிலையில் இன்று ஆழியார் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சிலர் நான்கு சக்கர வாகனத்தில் வந்தனர்.அப்போது அங்கலகுறிச்சி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை ஏறும்பொழுது கட்டுப்பாட்டை இழந்த நான்கு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தகவலறிந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Comments
Post a Comment