மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறையில் கரடித்தாக்கி 2 பெண்கள் படுகாயம்.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. மாணிக்க எஸ்டேட் என்.சி தேயிலைத் தோட்டத்தில் இன்று வேலை பார்த்து வந்த வட மாநில பெண் சுமதி ஹைத்தியன். இருவரை கரடி தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர் உடனே அப்பகுதியில் இருந்து வால்பாறை அரசு மருத்துவமனை மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் மற்றும் வால்பாறை பகுதிகளில் கரடி யானை சிறுத்தை போன்ற மிருகங்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் தொழிலாளர்கள் வேலை செய்து வருவதில் அச்சமடைந்துள்ளார்கள். கரடியின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வனத்துறை கூண்டு வைத்து பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தொழிலாளர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
Comments
Post a Comment