மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி கடன் தொல்லையால் காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை
பொள்ளாச்சி வடுகபாளையம் பசும்பொன் நகரைச் சேர்ந்த மயில்சாமி மகன் சிவசாமி (53) இவர் பில்டிங் காண்ட்ராக்ட் பணி செய்து வருகிறார் இவர் பொள்ளாச்சி சேரன் நகர் பகுதியில் காண்ட்ராக்ட் எடுத்து வீடு கட்டி வருகிறார் வீட்டுக்கு தேவையான பொருட்களை இவரே வாங்கி பணி செய்ததாகவும் இவருக்கு வரவேண்டிய தொகையை மேற்படி வீட்டின் உரிமையாளர் தரவில்லை என்பதாலும் தன் மூலம் பொருட்கள் வாங்கிய நபர்களுக்கு பணம் கொடுக்க முடியாத காரணத்தால் பொருட்களை தந்த நபர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர் இதனால் மன விரக்தியில் இருந்த சிவசாமி இன்று தனது வீட்டின் சமையலறையில் தனக்கு தானே தூக்கு மாட்டி இறந்துள்ளார் தகவலறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் லோகேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Comments
Post a Comment