மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை சுந்தராபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை:-மார்ச்-25 கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையின் சார்பாக குறிச்சி சுந்தராபுரத்தில் ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்த மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமை துறை குறிச்சி நகர தலைவர் ரங்கராஜ் வரவேற்றார். முன்னிலையாக மாவட்டத் துணைத் தலைவர் R.கோபாலகிருஷ்ணன்.மாவட்ட பொதுச்செயலாளர் V.C. முருகன். திருநகர் மணி.குறிச்சி சர்க்கிள் தலைவர்கள் முகமது இஸ்மாயில். முருகநாதன். சிறுபான்மை துறை மாவட்டத் தலைவர் ஆருண் .ஆகியோர் முன்னிலை வைத்தனர். கோவை தெற்கு மாவட்ட மனித உரிமை துறை மாவட்டத் தலைவர் கராத்தே S.பஞ்சலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்ததை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.மேலும் கூட்டத்தில் மாநில பேச்சாளர் மகாலிங்கம். தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாவட்ட துணை தலைவர் சிராஜுதீன்.ரவி சேகர். பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி பொள்ளாச்சி வடக்கு வட்டார தலைவர் நாகர்ஜூன். பொள்ளாச்சி தெற்கு வட்டார நகர துணை தலைவர் கோகுல். OBC.சேகர்.வால்பாறை நகரத் தலைவர் முனீஸ்வரன் அஜித் மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணராஜ். வெண்ணிலா ரவிக்குமார். மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய தலைவர்கள் சார்பு அமைப்பு தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment