மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் பணியாற்றியது மன நிறைவான காலம்

 

கோவை:-பிப்-05 கோவை மக்களே, வணக்கம். கோவையில் பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த மனநிறைவான காலம் என்பது நிதர்சனம்.
இந்தக் காலக்கட்டத்தில் நாம் இணைந்து பல்வேறு செயல்களைச் செய்து விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய செயல்பட்டோம். 
கோவிட் 2ம் அலையின் நெருக்கடியான காலகட்டத்திலிருந்து தொடங்கி, இன்று வரை நீங்கள் அனைவரும் அனைத்து நல்ல காரணங்களுக்காகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தீர்கள். 
கோவை மாவட்ட மக்களின் அன்பும் பாசமும் என்னை மிகவும் கவர்ந்தன. கோவைக்கு என்றும் என் இதயத்தில் தனி இடம் உண்டு என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
              பத்திரிக்கையாளர் ஜீவா

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்