மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பணியாளர்களை  சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து தமிழகமெங்கும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் வேலை நிறுத்தம்


கோவை;-ஏப்-30 தரமற்ற அரிசியை  விநியோகம் செய்த காரணத்திற்காக 
காஞ்சி புரத்தில் .20. பணியாளர்களை சஸ்பெண்ட்  செய்தது தவறு நடவடிக்கையை திரும்ப பெறக்கோரி மாநிலம் முழுவதும் கூட்டுறவு கடன் சங்கம் 
ரேசன் கடைகளை அடைப்பதாக  தமிழ் நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது
காஞ்சிபுரத்தில் தரமற்ற அரிசியை விநியோகம் செய்த காரணத்திற்காக.11. ரேசன் கடை விற்பனையாளர்கள்.9. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 
நுகர் பொருள் வாணிப. கழகம்  வழங்கும் அரிசியை தான் ரேசன்  கடை பணியாளர்கள்  விநியோகம் செய்கின்றனர். இதை கண்டித்து இன்று .30/4/2022. மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க. வேளான்  கூட்டுறவு  கடன் சங்கங்கள், ரேசன் கடை 
பணியாளர்கள் வேலை  நிறுத்தத்தில்  ஈடுபட்டனர்
சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யாவிட்டால்  மே.9 ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்  செய்யப்படும் என்று 
கோவை மாவட்ட  செயலாளர்.M.பால்ராஜ் 
தெரிவித்தார்.
சூலூர் ஒன்றிய பொருளாளர்.V. ராகவன்  போராட்ட. ஏற்பாட்டை  செய்திருந்தார்.சூலூர்   ஒன்றிய. டாக்பியா   உறுப்பினர்கள்   திரளாக. கலந்து கொண்டனர்
                            நிருபர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்