மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் ஈஸ்டர் திருவிழா கூட்டு திருப்பலி 



பொள்ளாச்சி;-ஏப்-16 பொள்ளாச்சியில் 16-ந்தேதி நள்ளிரவு 
12 மணிக்கு ஈஸ்டர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
இயேசு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல்  நிகழ்ச்சியை பாலக்காடு ரோட்டில் உள்ள பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆலயத்தின் பங்குத்தந்தை 
திரு.ஜேக்கப் அடிகளார் மற்றும் உதவி பங்குத்தந்தை திரு.லிவிங்ஸ்டன் 
ஆகியோர் கூட்டு பிரார்த்தனை திருப்பலி நடத்தினர். 
கடந்த 40 நாட்களாக நோன்பிருந்து பல பக்தி முயற்சிகள் மேற்கொண்டு 
இன்றோடு 40 நாட்கள் முடிவுற்று இந்த விரதத்தை முடித்துக் கொண்டனர்.
இயேசு உயர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா நிகழ்ச்சியில் பங்குகொண்ட அனைவரும் 
ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்