மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் இந்திய சட்ட அமைச்சரிடம் கோரிக்கை
இந்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பொறுப்பாளர்கள் டெல்லியில் சந்தித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
சட்ட அமைச்சருடனான சந்திப்பின்போது, பார் கவுன்சில் தலைவர் P.S.அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன்புஷ்பநாதன், பாலுகலியபெருமாள் Kaliyaperumal மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment