மக்கள் வெளிச்சம்
வால்பாறை 15 வயது சிறுமி கர்ப்பம் 17 வயது சிறுவன் போக்சோ வில் கைது
வால்பாறை அருகே உள்ள தனியார் எஸ்டேட்டில் சிறுமியின் பெற்றோர்கள் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர் இவர்களது மகள் தற்போது ஆன்லைனில் படித்து வருகிறார் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார் இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்த்ததில் 7 மாதம் கர்ப்பமாக உள்ளது தெரிய வந்தது சிறுமியின் பெற்றோர்கள் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது சிறுவனை விசாரணை செய்ததில் சிறுமியை கர்ப்பமாக்கியது விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment