மக்கள் வெளிச்சம்
பொள்ளாச்சி பெண்கள் உதவி மைய பெண் காவலர்களை பாராட்டி காவல்துறை தலைவர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் அனைத்து காவல் நிலையங்களில் இருந்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்து பெண்கள் உதவி மையம் சார்பில் பொதுமக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர், இதையடுத்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் திருமதி கலைச்செல்வி, செல்வி சத்யாபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர், ஆதலால் கோவை மாவட்ட காவல்துறை தலைவர் முத்துசாமி இருவரையும் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment