மக்கள் வெளிச்சம் நாளிதழ்
ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் இருபத்தி எட்டு யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது, கலீம், சின்னத்தம்பி,அரிசி ராஜா என்கிற முத்து யானைகள் உள்ளன, கோழிக்கமுத்தி, வரகளியாறுவளர்ப்பு யானைகளுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் துணைகள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் உலக யானைகள் தினம் கோழிக்கமுத்தியில் கொண்டாடப்பட்டது, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பொங்கல் வைத்து வழிபட்டு யானைகளுக்கு உணவுகளை வனத்துறையினர் வழங்கினர்,இதில் வனச்சரகர் நவீன்குமார்,வனத்துறையினர், யானை பாகன்கள்,வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment